யாழ்.வடமராட்சி மருதங்கேணி பிரதேசத்தில் 391 குடும்பங்கள் பாதிப்பு.-- பிரதேச செயலர் கே.பிரபாகரமூர்த்தி தெரிவிப்பு
4 months ago



யாழ்.வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் 391 குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக மருதங்கேணி பிரதேச செயலாளர் கே.பிரபாகரமூர்த்தி தெரிவித்தார்.
364 குடும்பங்களைச் சேர்ந்த 1069 பேர் உறவிர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர். நான்கு நலன்புரி முகாம்களில் ஏனையவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
குடத்தனை - பொற்பதி றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலையில் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 10 பேரும், அம்பன் பிரதேசத்தில் சிவனொளி முன்பள்ளியில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 7 பேரும், நாகர்கோவில் மகாவித்தியாலயத்தில் 21 குடும்பங்களைச் சேர்ந்த 70 பேரும், மருதங்கேணி கிராம சேவகர் அலுவலகத்தில் ஒரு குடும்பங்களைச் சேர்ந்த 4 பேருமாக 27 குடும்பங்களைச் சேர்ந்த 91 பேர் நான்கு நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
