கனடாவின் தபால் திணைக்களம் பாரியளவில் நிதி நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கனடாவின் தபால் திணைக்களம் பாரியளவில் நிதி நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பணிகளை முன்னெடுத்துச் செல்வ தற்கு போதிய அளவு நிதி வசதி கிடையாது என அது தெரிவித்துள்ளது. திணைக்களத்தின் பணிப்பாளர் சபை மற்றும் சிரேஷ்ட முகாமைத்து வத்தினர் மிகவும் நெருக்கடியான நிலையில் நிறுவனம் காணப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
அண்மையில் நடைபெற்ற ஆண்டு பொதுக்கூட்டத்தில் இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
கனடிய தபால் திணைக்களத்தை நடத்திச் செல்வதற்கு அடிப்படை ரீதி யான மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் எனவும் தபால் விநியோகத்தை சீராக முன்னெடுப்பதற்கு சில மாற் றங்களை செய்ய வேண்டும் எனவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
கோவிட் காலத்தில் இணைய வழி யிலான கொள்வனவு முறைமை அதிக அளவில் பயன்படுத்தப்பட்டதுடன் அதி உயர்தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. இவ்வாறான ஒரு பின்னணியில் கனடிய தபால் திணைக்களம் பல்வேறு சவால்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக பொதிகள் அனுப்பி வைத்தல் போன்ற செயற்பாடுகளுக்கு மக்கள் தபால் திணைக்களத்தை தவிர்த்து வேறு நிறுவனங்களின் சேவையைப் பெற்றுக் கொள்ளத் தொடங்கியுள்ளனர் எனச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இரண்டு தசாப்த இடைவெளியில் 5.5 பில்லியன் கடிதங்களை விநியோ கம் செய்த தபால் திணைக்களம் தற் பொழுது இரண்டு பில்லியன் கடிதங்களை விநியோகம் செய்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முதல் காலாண்டு பகுதியில் 76 மில்லியன் டொலர்கள் நட்டத்தை எதிர்நோக்கிய கனடிய தபால் திணைக்களம் இரண்டாம் காலாண் டில் 46 மில்லியன் வருமானத்தை ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த வருமானம் வேறு துணை நிறுவனத்தின் ஊடாக லாபமாக ஈட் டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப் படுகின்றது.
அண்மைய பதிவுகள்

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.

வடக்கில் போதைக்கு அடிமையான சிறுவர், சிறுமிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கட்டுப்படுத்த முடியாமல் திணறும் அதிகாரிகள்

யாழ்.மருதனார்மடம் இராமநாதன் மகளிர் கல்லூரியில் சர்வதேச சூழல் தினமும், சர்வதேச நீர் தினப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர் கௌரவிப்பும்
