கொக்கெய்ன் போதைப் பொருளுடன் இலங்கைத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த கனடிய தமிழர் ஒருவர் அமெரிக்க எல்லைப் பகுதியில் கைது.


120 கிலோ கிராமுக்கு அதிகமான கொக்கெய்ன் போதைப் பொருளுடன் இலங்கைத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த கனடிய தமிழர் ஒருவர் அமெரிக்க எல்லைப் பகுதியில் கைது செய் யப்பட்டுள்ளார்.
அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு மற்றும் உள்நாட்டுப் பாது காப்பு விசாரணைகள் பிரிவு அதிகாரிகள் போர்ட் ஹுரோனில் உள்ள ப்ளுா வாட்டர் பாலத்தில் இவர் ஓட்டிச் சென்ற டிரக்கில் இருந்து 266 இறாத்தல் (பவுண்டுகள்) கொக்கைனை கடந்த முதலாம் திகதி மாலை 4.30 மணியளவில் கைப்பற்றிய பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.
42 வயதுடைய ட்ரக் சாரதியான ஜூலி சபேசன் சத்தியசீலன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார் என செயின்ட் கிளேர் கவுண்டி ஷெரிப் அலுவலகம் தெரிவித்துள்ளது
மோப்ப நாய்க் குழு மற்றும் எக்ஸ்ரே ஸ்கேன் ஆய்வு ஆகியவற்றின் மூலம் அவர் ஓட்டி வந்த டிரெய்லருக்குள் ஒரு பொய்யான சுவருக்குப் பின்னால் மறைத்து வைக்கப்பட்டிருந்த 100 கட்டிகள் சந்தேகத்திற்கிடமான போதைப்பொருள்கள் கண்டு பிடிக்கப்பட்டன என அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு பிரிவுத் தகவல்கள் தெரிவித்தன.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
