மட்டக்களப்பு, பாசிக்குடா கடலில் நீராடச் சென்ற ரஷ்ய நாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்

மட்டக்களப்பு, பாசிக்குடா கடலில் நீராடச் சென்ற ரஷ்ய நாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது என்று கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.
ரஷ்ய நாட்டைச் சேர்ந்த 65 வயதுடைய ரூக்கரிசன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
ரஷ்ய நாட்டில் இருந்து இலங்கைக்குச் சுற்றுலா பயணம் மேற்கொண்ட மேற்படி நபர் சம்பவ தினமான இன்று காலை பாசிக்குடா கடலில் நீராடியபோது கடலில் மூழ்கி தத்தளித்துக் கொண்டிருந்தபோது அங்கு இருந்த கடற்படையினர் உடனடியாகச் செயற்பட்டு அவரை மீட்டுக் கரைக்குக் கொண்டு வந்தனர்.
இதனையடுத்து அவரை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கல்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
