சிங்கப்பூர் நகைக்கடையில் மனைவிக்குத் தங்கச் சங்கிலி வாங்கியவருக்கு குலுக்கலில் இந்திய மதிப்பில் 08 கோடி ரூபா விழுந்துள்ளது.

சிங்கப்பூரில் நகைக்கடை ஒன்றில் தனது மனைவிக்குத் தங்கச் சங்கிலியை வாங்கிய தமிழர் ஒருவருக்கு குலுக்கல் பரிசு போட்டியில் இந்திய மதிப்பில் 08 கோடி ரூபா பரிசு விழுந்துள்ளது.
இதனால் அவர் கடும் மகிழ்ச்சியில் உள்ளார். சிங்கப்பூரைச் சேர்ந்த பொறியிலாளரான பாலசுப்பிரமணியம் சிதம்பரம் என்பவருக்கே இந்த அதிஷ்டம் அடித்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை சிங்கப்பூர் லிட்டில் இந்தியா பகுதியிலுள்ள நகைக் கடையொன்றுக்கு சென்று தனது மனைவிக்காக 6 ஆயிரம் சிங்கப்பூர் டொலர் மதிப்பில் தங்கச் சங்கிலி வாங்கினார்.
இந்தக் கடையில் குறைந்தது 250 சிங்கப்பூர் டொலருக்கு பொருள்கள் வாங்குபவர்களுக்காக குலுக்கல் பரிசை அந்தக் கடை நடத்தி வந்தது.
அந்த குலுக்கல் பரிசுப் போட்டியில் பாலசுப்பிரமணியம் பங்கேற்றார்.
தற்போது அவருக்கு அந்தக் குலுக்கலில் 10 லட்சம் அமெரிக்க டொலர்கள் பரிசு கிடைத்துள்ளது.
அதாவது இந்திய மதிப்பில் 8 கோடி ரூபாவுக்கும் அதிகமானது இந்த பரிசுத்தொகை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
