

1.5 மில்லியன் லீற்றர் எரிபொருள் சட்டவிரோதமாக கடத்தப்படுவதாக குற்றம்சாட்டி, ஈரானிய புரட்சிப் படையினர் எரிபொருள் தாங்கி கப்பல் ஒன்றைக் கைப்பற்றியுள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை (22) அவர்கள் குறித்த கப்பலை பாரசீக வளைகுடாவில் வைத்து தங்கள் காவலில் எடுத்துக்கொண்டுள்ளனர்.
மேற்கு ஆபிரிக்க நாடான டோகோவின் கொடியின் கீழ் எரிபொருளை ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்றே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.
12 பேர் கொண்ட ஊழியர்கள் குழுவில் இலங்கையர்களும் உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
