சீரற்ற வானிலையால் வடக்கில் 3 மாவட்டங்களைச் சேர்ந்த 15,622 பேர் பாதிப்பு.--அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவிப்பு
6 months ago

மழையுடனான சீரற்ற வானிலையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக வடமாகாணத்தில் 3 மாவட்டங்களைச் சேர்ந்த 15,622 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 7,025 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 29 வீடுகள் சேதமடைந்துள்ளன.
அத்துடன், கிளிநொச்சி மாவட்டத்தில் 365 பேரும் மன்னார் மாவட்டத்தில் 7,854 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் 122 குடும்பங்களைச் சேர்ந்த 399 பேர் நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
