திருட்டுச் சம்பவம் தொடர்பில் சந்தேகிக்கப்படும், வடமராட்சி - குடத்தனையில் ஒருவர் மருதங்கேணிப் பொலிஸாரால் கைது
3 months ago

திருட்டுச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புள்ளதாக சந்தேகிக்கப்படும், வடமராட்சி - குடத்தனை, மாளிகைத்திடல் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் மருதங்கேணி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனியார் கம்பனியின் சொத்துகள், ஆவணங்கள், தொலைபேசி மற்றும் ஒரு தொகை பணம் என்பனவற்றை திருடிய சம்பவத்தின் அடிப்படையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரை கைது செய்யச் சென்ற பொலிஸாரைத் தாக்கியதுடன் தப்பியோட முயன்றதாகவும் பொலிஸார் கூறினர்.
பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குறித்த நபரை மருதங்கேணி பொலிஸார் தடுத்து வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
