திருட்டுச் சம்பவம் தொடர்பில் சந்தேகிக்கப்படும், வடமராட்சி - குடத்தனையில் ஒருவர் மருதங்கேணிப் பொலிஸாரால் கைது
4 months ago

திருட்டுச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புள்ளதாக சந்தேகிக்கப்படும், வடமராட்சி - குடத்தனை, மாளிகைத்திடல் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் மருதங்கேணி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனியார் கம்பனியின் சொத்துகள், ஆவணங்கள், தொலைபேசி மற்றும் ஒரு தொகை பணம் என்பனவற்றை திருடிய சம்பவத்தின் அடிப்படையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரை கைது செய்யச் சென்ற பொலிஸாரைத் தாக்கியதுடன் தப்பியோட முயன்றதாகவும் பொலிஸார் கூறினர்.
பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குறித்த நபரை மருதங்கேணி பொலிஸார் தடுத்து வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
