
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும் வெளிப்புற ஆதாரங்களை சேகரிப்பதற்கான பொறி முறையையும் நிராகரிப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் 57ஆவது கூட்டத்தொடர் நேற்று ஆரம்பமானது. இதில், முதல் நாளிலேயே இலங்கை தொடர்பான
தீர்மானங்கள் விவாதத்துக்கு எடுக்கப்பட்டன. அமர்வில் உரையாற்றிய ஐ. நா. மனித உரிமைகள் பேரவைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ஹிமாலி அருணதிலக ,“ஐ. நா. தீர்மானங்கள் இலங்கையின் சம்மதமின்றி அவை நிறைவேற்றப்பட்டமையால் அவற்றை இலங்கை நிராகரிக் கின்றது.
இலங்கை பல தசாப்தகால மோதல்களால் ஏற்பட்ட காயங்களை ஆற்றுவதற்கான முயற்சிகளை மேற் கொண்டுள்ளது. முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்க போராளிகளை புனர்வாழ்வுக்கு உட்படுத்தினோம். இடம் பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றி னோம்.”, என்றும் கூறினார்.
அண்மைய பதிவுகள்

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.

வடக்கில் போதைக்கு அடிமையான சிறுவர், சிறுமிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கட்டுப்படுத்த முடியாமல் திணறும் அதிகாரிகள்

யாழ்.மருதனார்மடம் இராமநாதன் மகளிர் கல்லூரியில் சர்வதேச சூழல் தினமும், சர்வதேச நீர் தினப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர் கௌரவிப்பும்
