இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள கட்சியான திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி யாழ்ப்பாணம் விஜயம் செய்துள்ளார்.





இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள கட்சியான திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி யாழ்ப்பாணம் விஜயம் செய்துள்ளார்.
யாழ்ப்பாணத்துக்கு வருகைதந்த வீரமணியை இலங்கை தமிழரசுக் கட்சித் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா மற்றும் அமிர்தலிங்கம் நினைவு அறக்கட்டளையினர் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.
இலங்கை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி வகித்த முதலாவது தமிழர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 97ஆவது பிறந்தநாள் நினைவுப் பேருரை நாளை சனிக்கிழமை (24) பிற்பகல் 3 மணிக்கு யாழ். நகரில் அமைந்துள்ள றிம்மர் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காகவே தமிழக அரசியல்வாதியும் திராவிடர் கழகத் தலைவருமான கி.வீரமணி யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளார்.
அமிர்தலிங்கம் நினைவு அறக்கட்டளையின் ஏற்பாட்டில் ஓய்வுநிலை மேல்நீதிமன்ற நீதிபதி இ.த.விக்கினராசா தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் கி.வீரமணி நினைவுப் பேருரை நிகழ்த்தவுள்ளார்.
அத்தோடு, சிறப்புரையினை தென்னிந்தியத் திருச்சபையின் ஆயர் கலாநிதி வி.பத்மதயாளன் ஆற்றவுள்ளார்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
