இலங்கைக் கடலில் எல்லை தாண்டி மீன்பிடித்த இந்திய மீனவர்கள் 34 பேர் இன்று கடற்படையால் கைது
4 months ago

இலங்கைக் கடற்பரப்பரப்புக்குள் எல்லை தாண்டி மீன்பிடித்த இந்திய மீனவர்கள் 34 பேர் இன்று(26) அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
தமிழகம் - இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 34 இந்திய மீனவர்கள் மூன்று படகுகளில் கிளிநொச்சி கடற்பரப்புக்குள் ஊடுருவி மீன்பிடியில் ஈடுபட்ட சமயமே கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 34 பேரும் கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் இன்று காலை ஒப்படைக்கப்பட்டு உள்ளனர்.
அவர்கள் கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்கள் என்று கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
