
ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பாளர்களின் முதலாவது குழு நாட்டிற்கு வருகை தந்துள்ளது.
எதிர்வரும் சில வாரங்களுக்குள் மற்றுமொரு குழுவினர் நாட்டிற்கு வருகை தரவுள்ளனர்.
ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக பொதுநலவாய தேர்தல் கண்காணிப்பு குழுவும் நாட்டிற்கு வருகை தந்துள்ளது. தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக விடுக்கப்பட்ட கோரிக்கைகளை பரிசீலித்து மேற்படி குழுக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக ஆசிய தேர்தல் கண்காணிப்பு வலையமைப்பின் பிரதிநிதிகளும் எதிர்வரும் சில வாரங்களுக்குள் நாட்டிற்கு வருகை தரவுள்ளனர்.
அண்மைய பதிவுகள்

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் வவுனியா மாவட்டத்தின் உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவான உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு

இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட மாணவி கிருஷாந்தி வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட 5 குற்றவாளிகள் தாக்கல் செய்த வழக்கு உயர்நீதிமன்றம் நிராகரிப்பு

இந்தியாவில் அகதிகளாக தங்கியிருக்கும் இலங்கையர்களின் நுழைவுக்கான தடைகளை நீக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது
