புல்மோட்டையில் இருந்து மீன்பிடிக்கச் சென்றவர்கள் மீது கடற்படையினர் துப்பாக்கிப் பிரயோகம், மீனவர் ஒருவர் படுகாயம்
2 days ago


திருகோணமலை, புல்மோட்டையில் இருந்து மீன்பிடிக்கச் சென்றவர்கள் மீது கடற்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் மீனவர் ஒருவர் படுகாயமுற்ற நிலையில் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான மீனவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் கடற்படை பேச்சாளரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, "அந்தப் பகுதியில் இடம்பெற்ற சட்டவிரோத மீன்பிடியைத் தடுக்க முயன்ற சமயம் பலர் தப்பிச் சென்றனர்.இதன்போது கடற்படையினர் எச்சரிக்கை வேட்டுக்களைத் தீர்த்தனர். இருந்த போதும் எவரும் இலக்கு வைக்கப்படவில்லை.
இந்தச் சம்பவம் தொடர்பில் உடனடி விசாரணைகள் இடம்பெறுகின்றன."- என்று பதிலளித்தார்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
