பிலிப்பைன்ஸில் கடல் ஆமை இறைச்சியை உட்கொண்ட 3 பேர் உயிரிழந்ததுடன், 32 பேர் வைத்தியசாலையில்
6 months ago

பிலிப்பைன்ஸில் கடல் ஆமை இறைச்சியை உட்கொண்ட 3 பேர் உயிரிழந்ததுடன், 32 பேர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.
பிலிப்பைன்ஸின், Maguindanao del Norte மாகாணத்தில் கடல் ஆமை இறைச்சியை உட்கொண்டதில் இருந்து, பல பழங்குடியின மக்கள் வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் வயிற்றுப் பிடிப்பு போன்றவற்றினால் பாதிக்கப்பட்டனர்.
இதனையடுத்து சுமார் 32 பேர் வரையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில், 31 பேர் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாகவும் ஒருவர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகின்றது .
அதேவேளை பிலிப்பைன்ஸின் சுற்றுச் சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், கடல் ஆமைகளை வேட்டையாடுவது அல்லது உட்கொள்வது சட்டவிரோதமான விடயம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
