
தாய்வானில் இன்று அதிகாலை 12.17 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
அந்நாட்டின் யுஜிங் நகரில் இருந்து வடக்கே 12 கிலோ மீற்றர் தொலைவில் 10 கிலோ மீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலநடுக்கமானது ரிச்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளது.
இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டடங்கள் அதிர்ந்துள்ளதாகவும் இதனைத் தொடர்ந்து மக்கள் அலறியடித்துக்கொண்டு வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த நிலநடுக்கத்தினால் 15 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் எனினும் உயிரிழப்பு சம்பவங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
