






மீனவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து மாபெரும் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையம் அறிவித்துள்ளது.
மன்னார் மாவட்டத்தில் நேற்று (23) இடம் பெற்ற வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் பொதுக்கூட்டத்தில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
எல்லை தாண்டிய இந்திய மீனவர்கள் பிரச்சினை, உள்ளூர் இழுவை மடி பிரச்சினை, தடை செய்யப்பட்ட மீன் பிடி பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை கட்டுப்படுத்தக் கோரி இந்தப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.
இதேவேளை வடமாகாண கடற்றொழிலாளர் இணையத் துக்குப் புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் தலைவராக கிளிநொச்சி மாவட்ட மீனவ பிரதிநிதி ஜோசப் பிரான்சிஸ்சும், செயலாளராக மன்னார் மாவட்டத் திலிருந்து மீனவ பிரதிநிதி முகமட் ஆலமும், பொருளாளராக யாழ்ப்பாணத்தில் இருந்து திருமதி பிரியாவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
உப தலைவராக முல்லைத்தீவு பிரதிநிதி தணிகாசலமும், உப செயலாளர் மன்னார் மாவட்டத்தில் இருந்து திருமதி றீற்றா வசந்தியும் தெரிவு செய்யப்பட்டதுடன் மாவட்ட தலைவர்களாக யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து இ.முரளிதரன், கிளிநொச்சியிலிருந்து அமலதாஸ், மன்னார் மாவட்டத்திலிருந்து அன்ரனி சங்கர், முல்லைத்தீவில் இருந்து அ.நடனலிங்கம் ஆகியோர் உட்பட 16 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதில் வடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 56 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
பிரதம அழைப்பாளராக கலாநிதி சூசைதாசனும், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்க தேசிய அமைப்பாளர் கேர்மன்குமார ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
