பெலாரஸில் கைது செய்யப்பட்டுள்ள குற்றக் கும்பலை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை தூதரகத்திற்கு அறிவிப்பு.


பெலாரஸில் கைது செய்யப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களின் தலைவர்களான கஞ்சிபானை இம்ரான், லொக்கு பட்டி மற்றும் ரொடும்பா அமில ஆகியோரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு இலங்கை தூதரகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் பெலாரஸில் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அந்நாட்டின் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவித்திருந்தது.
இதன்படி, குற்றப்புலனாய்வு திணைக்களம் இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சுக்கு அறிவித்துள்ளது.
இதற்கமைய, சந்தேக நபர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பெலாரஸின் இலங்கை துணைத்தூதரகத்திற்கு வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
பெலாரஸில் சட்டவிரோதமாக பிரவேசித்த குற்றச்சாட்டின் பேரில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பல் உறுப்பினர்களான கஞ்சிபானை இம்ரான், லொக்கு பட்டி மற்றும் ரொடும்பா அமில ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் மூவரும் சமர்ப்பித்த கடவுச்சீட்டு மற்றும் விசாக்கள் போலியானவை என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட மூவரும் தற்போது பெலாரஸில் உள்ள தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
