கனடாவின் பிரதமராக தொடர்ந்தும் நீடிப்பதில் தாம் உறுதியுடன் உள்ளேன் என ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
டொரன்டோ சென்-போல்ஸ் இடைத்தேர்தல் முடிவுகளின் பின்னர் தமது பதவி குறித்து பலவிதமான கருத்துக்கள் வெளிவருவதைத் தாம் அறிந்திருக்கின்றார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தோல்வி ஒன்றைத் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்கள் வெளிவருவது சகஜமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கனடா தினத்தையொட்டி அவர் வெளியிட்டுள்ள செய்தியிலேயே அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.
சிறந்த கனடா ஒன்றை கட்டியெழுப்புவதற்காக ஒவ்வொரு நாளும் கடுமையாக உழைக்கின்றார் எனவும், அடுத்த கனடா
தினத்திற்காகவும், மேலும் பல கனடா தினத்திற்காகவும் தாம் ஆவலுடன் காத்திருக்கின்றார் எனவும் அவர் கூறியுள்ளார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
