
ஒரே இரவில் 37 உக்ரைனின் டிரோன்களை அழித்ததாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் - ரஷியாவுக்கும் இடையே கடந்த பல மாதங்களாகவே மோதல் நிலவி வரும் நிலையில் உக்ரைன் நாட்டின் மீது ரஷியா தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில் ஒரே இரவில் 37 உக்ரைன் டிரோன்களை இடைமறித்து அழித்ததாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதன்படி, நேற்று இரவு ரஷியா கூட்டமைப்பின் எல்லையில் உள்ள இலக்குகள் மீது டிரோன்களை பயன்படுத்தி பயங்கரவாத தாக்குதல்களை நடத்த உக்ரைன் முயன்றபோது, ரஷிய ராணுவம் அதை இடைமறித்து அழித்தன.
அதில் 12 டிரோன்கள் குர்ஸ்க் பிராந்தியத்தின் மீதும், 12 கிராஸ்னோடர் பிரதேசத்தின் மீதும், ஏழு பிரையன்ஸ்க் பிராந்தியத்தின் மீதும், ஐந்து ஓரியோல் பிராந்தியத்தின் மீதும் மற்றும் ஒன்றூ அசோவ் கடல் மீதும் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
