
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட சிகரெட்டுகளுடன் இளைஞர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளினால் விமான நிலைய வளாகத்தில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இன்று காலை இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபர் டுபாயில் இருந்து வந்துள்ளதுடன், இலங்கைக்கு வரியின்றி கொண்டு வரப்பட்ட 28,400 சிகரெட்டுகள் மற்றும் 142 அட்டைப்பெட்டிகள் அவரது பயணப் பொதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
22 வயதான இந்த சந்தேக நபர் கலபுலுலந்த பிரதேசத்தை சேர்ந்தவராகும்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் விமான நிலையப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
