
திருகோணமலை, கடலில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை குளித்துக் கொண்டிருந்தபோது நீரில் மூழ்கிக் காணாமல்போன 20 வயதான இளைஞர் இன்று சனிக்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் மாலை திருகோணமலை கடற்கரையில் நண்பர்களான 4 பேர் குளித்துக் கொண்டிருந்தபோது நீரில் மூழ்கினர்.
அவர்களில் மூவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
அத்தோடு ஒருவர் காணாமல் போனதையடுத்து அவரைத் தேடும் பணி திருகோணமலை கடற்படையினர் மற்றும் துறைமுகப் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வந்தது.
இந்தச் சம்பவத்தையடுத்து காப்பாற்றப்பட்ட இளைஞர்கள் மூவரும் விசாரணைக்காகத் திருகோணமலை துறைமுகப் பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்நிலையில், காணாமல்போன இளைஞர் இன்று காலை சடலமாக மீட்கப்படுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைத் திருகோணமலை துறைமுகப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
