யாழ்ப்பாணத்தில் நள்ளிரவு வேளை வீட்டின்மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
7 months ago


யாழ்ப்பாணத்தில் நள்ளிரவு வேளை வீட்டின்மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்தோடு, அந்த வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் தீக்கிரையாக்கப்பட்டு, மகேந்திரா வானின் கண்ணாடிகளும் அடித்து சேதப்படுத்தப்பட்டன.
இணுவில் வீதி, மானிப்பாயில் வசிக்கும் சந்திரபாலி அஹெனியா என்பவரது வீட் டின் மீதே நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் இந்தத் தாக்குதல் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இந்தத் தாக்குதல் சம்பவம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதோடு, பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
