இலங்கை - இந்தியா இடையே வலுவான உறவுநிலை ஏற்படும்! - வெளிவிவகார அமைச்சர் நம்பிக்கை
இந்தியா மற்றும் இலங்கை இடையே, இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்ட வலுவான உறவுகள் ஏற்படுத்தப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கியிருக்கும் நேர்காணலில் அலி சப்ரி மேலும் தெரிவித்ததாவது:-
இலங்கை - இந்தியாவுக்கு இடையில் நீண்டகாலமாக பல்துறை சார்ந்த வலுவான ஒத்துழைப்புக் காணப்படுகின்றது.
இருநாடுகளுக்கும் பொதுவான பரஸ்பர நலன்களை முன்னிறுத்தி இணைந்து பணியாற்றுகின் றோம். துறைமுகம், புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் போன்றவற்றில் மேலும் அதிகளவான இந்திய முதலீடுகளை எதிர்பார்க்கின்றோம்.
இந்தியா 'பொருளாதார சுபீட்சத்தை' நோக்கி நடைபோடுகின்றது. அது இந்தியப் பிராந்தியத்துக்கும், இலங்கை போன்ற நாடுகளுக்கும் நன்மையளிப்பதாகவே அமையும்.
அதேபோன்று இருநாடுகளுக்கும் இடையிலான மக்கள் மயப்படுத்தப்பட்ட கலாசாரத் தொடர்புகளும் நீண்ட காலமாக நிலவிவருகின்றன.

பௌத்தமதம் இந்தியாவிடமிருந்து இலங்கைக்குக் கிடைத்த பெரும் பரிசாகும்.
எனவே இருநாடுகளுக்கும் இடையிலான மக்கள் தொடர்புகளையும், சுற்றுலாத் துறையையும் மேலும் வலுப்படுத்துவதற்கான முதற்கட்ட நகர்வாக இராமாயணத்தை அடிப்படையாகக்கொண்ட இருநாட்டுத் தொடர்புகள் அமையுமென நம்புகின்றேன்.
இந்திய மக்களின் ஆதரவுடன் ஆட்சியமைக்கப்போகும் புதிய அரசாங்கத்துடன் நாம் இணைந்து பணியாற்றுவோம் என்றார்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
