வவுனியாவில் கடற்படை அதிகாரியொருவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்ததாக பூனாவ பொலிஸார் தெரிவித்தனர்
6 months ago



வவுனியாவில் கடற்படை லெப்டினன்ட் தர அதிகாரியொருவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (29) இடம்பெற்றதாக பூனாவ பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த அதிகாரி பணி நிமித்தமாக கொழும்புக்கு சென்றுவிட்டு, பேருந்தில் பூனாவ கடற்படை முகாமுக்கு திரும்பியுள்ளார்.
பேருந்திலிருந்து இறங்கி தான் கடமையாற்றும் முகாமுக்கு சென்று கொண்டிருந்த போதே யானை தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பூனாவ கடற்படை முகாமில் கடமையாற்றி வந்த மத்தலான, நிட்டம்புவவில் வசிக்கும் கடற்படை வீரரே உயிரிழந்துள்ளார்.
யானை தாக்கியதில் பலத்த காயமடைந்தவரை கடற்படையினரும் உள்ளூர் மக்களும் இணைந்து வவுனியா மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
