யாழ்.பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்காக யாழ் நகரில் போதனா வைத்தியசாலை வளாகத்தில் புதிதாகக் நிர்மாணிக்கப்பட்டுள்ள எட்டு மாடிகளைக் கொண்ட மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சித் தொகுதி கட்டிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களால் இன்று(24.05.2024) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அழைப்பினையேற்று இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதியினால் இன்று இக்கட்டிடத் தொகுதி திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டிடத் தொகுதியில் இரண்டு பெரிய நவீன சத்திரசிகிச்சை தியேட்டர்கள், ஒரு சிறிய தியேட்டர், எண்டோஸ்கோபி மற்றும் மேமோகிராம், கருவுறுதல் பராமரிப்பு, யூரோடைனமிக் சேவைகள், கேட்போர் கூடம், முதுகலை மையம் மற்றும் மருத்துவ பணியாளர் அறை மற்றும் கற்பித்தல் வசதிகள் உட்பட பல நவீன வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்தக் கட்டிடத்தொகுதி 700 மில்லியன் ரூபாய் செலவில் கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டுக்கமைய நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
