யாழ்.பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்காக யாழ் நகரில் போதனா வைத்தியசாலை வளாகத்தில் புதிதாகக் நிர்மாணிக்கப்பட்டுள்ள எட்டு மாடிகளைக் கொண்ட மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சித் தொகுதி கட்டிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களால் இன்று(24.05.2024) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அழைப்பினையேற்று இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதியினால் இன்று இக்கட்டிடத் தொகுதி திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டிடத் தொகுதியில் இரண்டு பெரிய நவீன சத்திரசிகிச்சை தியேட்டர்கள், ஒரு சிறிய தியேட்டர், எண்டோஸ்கோபி மற்றும் மேமோகிராம், கருவுறுதல் பராமரிப்பு, யூரோடைனமிக் சேவைகள், கேட்போர் கூடம், முதுகலை மையம் மற்றும் மருத்துவ பணியாளர் அறை மற்றும் கற்பித்தல் வசதிகள் உட்பட பல நவீன வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்தக் கட்டிடத்தொகுதி 700 மில்லியன் ரூபாய் செலவில் கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டுக்கமைய நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
