ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத் தொடரில் கலந்துகொள்ள அமைச்சர் விஜிதஹேரத் குழு ஜெனிவா செல்கின்றது

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத் தொடர் இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், வெளிவிவகார அமைச்சர் விஜிதஹேரத் தலைமையிலான உயர்மட்டக் குழுவொன்று ஜெனிவா செல்கின்றது.
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான உயர்மட்டக் குழு, எதிர்வரும் 28ஆம் திகதி வரை ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகளில் பங்கேற்கவுள்ளது.
இலங்கைக்கு எதிராக போர்க் குற்றச்சாட்டுகள் அடங்கிய விசேட அறிக்கை ஒன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது என்று வெளிவிவகார அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இறுதிக்கட்டப் போரில் நடந்தன என்று கூறப்படும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையில் இலங்கையால் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது என்றும், அரசாங்கத்தின் நிலைப்பாட்டை சர்வதேசத்துக்கு தெளிவுபடுத்தும் வகையில் இந்த அறிக்கை அமையும் என்றும். வெளிவிவகார அமைச்சு வட்டாரங்களில் இருந்து அறிய முடிகின்றது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
