
கனடா டொரன்டோவில் வானிலை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.
கடுமையான பனிப்பொழிவுடன் கூடிய வானிலை நிலவும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
கடுமையான பனிப்பொழிவு காரணமாக போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த பஸ் சேவை இடைநிறுத்தம் தொடர்பில் டொரன்டோ போக்குவரத்து சேவை சமூக ஊடகங்களில் தகவல் வெளியிட்டுள்ளது.
மறு அறிவித்தல் வரை சில பகுதிகளுக்கான போக்குவரத்து சேவை இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகளின் பாதுகாப்பினை முதன்மையாக கருத்தில் கொண்டு இவ்வாறு சேவையை இடைநிறுத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காலநிலை சீர்கேடு காரணமாகவே இவ்வாறு சேவைகள் இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆல்பர்ட்டா மாகாணத்திலும் பனிப்பொழிவுக்கு தொடர்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.

வடக்கில் போதைக்கு அடிமையான சிறுவர், சிறுமிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கட்டுப்படுத்த முடியாமல் திணறும் அதிகாரிகள்

யாழ்.மருதனார்மடம் இராமநாதன் மகளிர் கல்லூரியில் சர்வதேச சூழல் தினமும், சர்வதேச நீர் தினப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர் கௌரவிப்பும்
