யாழ்.நல்லூரான் தெற்கு வாசல் வளைவு திறப்பு நிகழ்வு இன்று யாழ் கைலாசப் பிள்ளையார் தேவஸ்தானத்திற்கு அருகாமையில் இடம்பெற்றது




















யாழ்.நல்லூர் சைவத்தமிழ்ப் பண்பாட்டு கலைக் கூடத்தின் ஏற்பாட்டில் தைப்பூசதின திருநாளினை முன்னிட்டு அலங்காரா, நல்லூரா என்னும் கருப்பொருளிலான நல்லூரான் தெற்கு வாசல் வளைவு திறப்பு நிகழ்வு இன்று நண்பகல் 12.00 மணியளவில் யாழ் நல்லூர் கைலாசப் பிள்ளையார் தேவஸ்தானத்திற்கு அருகாமையில் திறந்து வைக்கப்பட்டது.
இவ் நிகழ்வில் யாழ் நல்லூர் கைலாசப் பிள்ளையார் தேவஸ்தானத்திற்கு சொந்தமான நெற்பயிர்செய்கை நிலத்தில் நெல் அறுவடை இடம்பெற்று புதிர்எடுத்து நெற்பெட்டகத்தில் சேகரிக்கப்பட்டு அலங்காரா, நல்லூரா என்னும் கருப்பொருளிலான நல்லூரான் தெற்கு வாசல் வளைவு திறக்கப்பட்டு அங்கு இருந்து மாட்டு வண்டியூடாக நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் கொண்டு சென்று கையளிக்கப்பட்டது.
பாரம்பரியமான முறையிலான மேள, தாள, வாத்தியங்கள்,புடைசூழ நண்பகல் 12.00 மணியளவில் திறந்து வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் வடமாகாண பிரதம செயலாளர் எல்.இளங்கோவன்,யாழ் மாநகர ஆணையாளர் ப.கிருஷ்னேந்திரன்,யாழ்,நல்லூர் பிரதேச செயலாளர்கள்,தெல்லிப்பளை துர்க்காதேவி தேவஸ்தான தலைவர் கலாநிதி ஆறுதிருமுருகன்,வேலன் சுவாமிகள், நல்லூர் சைவத்தமிழ்ப் பண்பாட்டு கலைக்கூடத்தின் உறுப்பினர்கள்,யாழ் நல்லூர் கைலாசப்பிள்ளையார் தேவஸ்தான உறுப்பினர்கள்,சமய ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
