புத்தளம், சிலாபம் ஹோட்டலில் சந்தேகத்துக்கு இடமான முறையில் தங்கியிருந்த 10 வெளிநாட்டுப் பிரஜைகள் கைது

புத்தளம், சிலாபம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இரணவில் பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சந்தேகத்துக்கு இடமான முறையில் தங்கியிருந்த 10 வெளிநாட்டுப் பிரஜைகள் நேற்று (15) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.
புத்தளம் பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
04 மலேசியப் பிரஜைகளும், ஒரு பெண் உட்பட 4 எத்தியோப்பியா பிரஜைகளும், கென்யா நாட்டுப் பெண்ணும், சீனப் பிரஜை ஒருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 20 கணினிகளும், 282 கையடக்கத் தொலைபேசிகளும், 03 ரவ்டர்களும் கைப்பற்றப்பட்டுள்ளன
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
