வாகன இறக்குமதி நிதி நிலைமைகள் அரசாங்க மாற்றத்துக்குப் பின்னரும் மாறவில்லை- நந்தலால் வீரசிங்க தெரிவிப்பு.

கடந்த அரசாங்கம் வாகன இறக்குமதி தடையை படிப்படியாக நீக்குவதற்கு வழிவகுத்த நிதி நிலை மைகள் அரசாங்க மாற்றத்துக்குப் பின்னரும் மாறாமல் இருக்கிறது என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க வலியுறுத்தினார்.
"முந்தைய அரசாங்கம் முடிவெடுத்த போது, தேவையான தொழில் நுட்ப பகுப்பாய்வுகளை நடத்திய பின்னர் மத்திய வங்கி பரிந்துரைகளை வழங்கியது." என அவர் கூறினார்.
பெப்ரவரி 1, 2025இற்குள் தனியார் வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை முழுமையாக தளர்த்துவதற்கான திட்டங்களை முந்தைய அரசாங்கம் அறிவித்திருந்தது.
நிதி நிலைமைகள் எதிர்பார்த்த பாதையில் தொடருமானால், தீர்மானத்தை தக்க வைத்துக் கொள்வது சாத்தியமாகும் என வீரசிங்க குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், வாகன இறக்குமதி தொடர்பான இறுதி முடிவு நிதியமைச்சினுடையது என்றும் தெரிவிக்கப்பட்டது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
