தமிழரசுக் கட்சிக்குள் மதுபானசாலை அனுமதிக் கடிதம் கொடுத்தவர்கள் இன்னும் இருக்கிறார்கள்.-- சுமந்திரன் தெரிவிப்பு.

மதுபானசாலை அனுமதிக்கு கடிதம் கொடுத்ததாலேயே சாள்ஸ் நிர்மலநாதன் தேர்தலில் இருந்து தானாக வெளியேறினார்.
விக்னேஸ்வரனும் போட்டியிடாது வெளியேறினார்.
இதேபோல், வேறுசிலரும் உள்ளே (கட்சிக்குள்) இருக்கிறார்கள். அவர்களும் தாமாக வெளியேறினால் நல்லது - இவ்வாறு கூறியுள்ளார் தமிழ் அரசுக் கட்சியின் எம். ஏ. சுமந்திரன்.
ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
தேர்தல் பிரசார மேடைகளில், முடிந்தால் எனது பெயரை தவிர்த்து உங்களின் தேர்தல் பரப்புரைகளை செய்யுங்கள் பார்க்கலாம் என்று ஏனைய கட்சிகளுக்கு சவாலும் விடுத்தார்.
மேலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைத்து முதலில் வெளியேறியவர்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர்தான்.
மக்களை கொன்றொழித்த சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளித்து தீர்மானம் எடுத்தபோது மேடையில் ஒன்றாக இருந்தவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.
அதன் பின்னர் நடந்த பொதுத் தேர்தலில் ஆசனப் பங்கீட்டின் போதே கட்சியை விட்டு வெளியேறினார்.
ஆசனப் பங்கீட்டு பிரச்சினையே மற்றைய கட்சிகளும் வெளியேறக் காரணமாயின.
பொதுத் தேர்தலை அடுத்து தேசிய அரசு அமைந்தால் அரசுக்கு ஆதரவளிப்போம்.
ஆனால், எதிர்க்கட்சி வரிசையிலேயே அமர்வோம். நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தைப் போன்று.”, என்றும் சுமந்திரன் சொன்னார்.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
