மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் புதிய எலும்பியல்துறை சத்திர சிகிச்சை விடுதிகள் திறந்து வைப்பு

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் புதிய எலும்பியல்துறை சத்திர சிகிச்சை விடுதிகள் திறந்து வைப்பு
அதிகரித்து வரும் வீதி விபத்துக்கள் மற்றும் ஏனைய திடீர் விபத்துக்களால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு உயர் தரமானதும் பாதுகாப்பான சத்திர சிகிச்சை சேவைகளை வழங்கும் நோக்கில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் புதிய எலும்பியல் துறை சத்திர சிகிச்சை (ஆண், பெண் இருபாலாருக்குமான) விடுதிகள் நேற்று (12) திறந்து வைக்கப்பட்டுள்ளன.
மன்னார் மாவட்டத்தின் மிக நீண்ட கால தேவையாகவிருந்த எலும்பு முறிவு மற்றும் சிகிச்சைக்கான விசேட விடுதிகளை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் அஸாத் ஹனிபா திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் எலும்பியல் சத்திர சிகிச்சை விசேட நிபுணர்கள் டாக்டர் பி. திலீபன், டாக்டர் ஆர்.எம்.எம். தீபன்,ஏனைய விசேட வைத்திய நிபுணர்கள் மற்றும் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
