கனடா தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி வெளியிட்ட கருத்து குறித்து பிரித்தானிய மன்னர் எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை.

கனடா தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட கருத்து குறித்து பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்ஸ் இதுவரையில் எவ்வித கருத்துகளையும் வெளியிடவில்லை.
கனடாவை அமெரிக்காவின் 51 ஆவது மாநிலமாக உள்வாங்கப் போவதாக ட்ரம்ப் அண்மையில் பரபரப்பு அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.
இந்த அறிவிப்பை அவர் பல்வேறு சந்தர்ப்பங்களில் மீண்டும் வலியுறுத்தி இருந்தார்.
இவ்வாறான ஒரு பின்னணியில் கனடாவின் அரச தலைவராக கருதப்படும் மூன்றாம் சால்ஸ் மன்னர் இந்த விவகாரம் தொடர்பில் எவ்வித கருத்துக்களையும் இதுவரையில் வெளியிடவில்லை.
மன்னரின் நேரடி பிரதிநிதியாக காணப்படும் ஆளுநர் நாயகம் மேரி சிமோனும் இந்த விவகாரம் தொடர்பில் எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை.
இதேவேளை, ட்ரம்பின் கருத்துக்கு பிரித்தானிய அரச குடும்பம் எவ்வித அறிவிப்பையும் வெளியிடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரம்பின இந்த அறிவிப்பு குறித்து கனடிய அரசியல் தலைவர்கள் கடுமையான எதிர்ப்பையும் அதிருப்தியும் வெளியிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.

வடக்கில் போதைக்கு அடிமையான சிறுவர், சிறுமிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கட்டுப்படுத்த முடியாமல் திணறும் அதிகாரிகள்

யாழ்.மருதனார்மடம் இராமநாதன் மகளிர் கல்லூரியில் சர்வதேச சூழல் தினமும், சர்வதேச நீர் தினப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர் கௌரவிப்பும்
