
நாடளாவிய ரீதியில் நேற்று காலை வரையான 24 மணி நேரத்தில் நடத்தப்பட்ட யுக்திய நடவடிக்கையில் போதைப் பொருள் குற்றம் தொடர்பில் 713 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களில் 701 ஆண்களும் 12 பெண்களும் காணப்படுகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
கைதான சந்தேக நபர்களில் 30 பேர் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட் டுள்ளதுடன், 55 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து 197 கிராம் 213 மில்லிகிராம் ஹெரோயின், 647 கிராம் 9 மில்லிகிராம் ஐஸ், 3 கிலோ 89 கிராம் 493 மில்லிகிராம் கஞ்சா, 10,752 கஞ்சா செடிகள் மற்றும் 440 போதை மாத்திரைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
