முல்லைத்தீவு முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட முள்ளியவளை தெற்கு பகுதியில் வீடு ஒன்று தீயில் எரிந்து முற்றாக சேதமடைந்துள்ளது.

முல்லைத்தீவு முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட முள்ளியவளை தெற்கு பகுதியில் வீடு ஒன்று தீயில் எரிந்து முற்றாக சேதமடைந்துள்ளது.
முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலயத்திற்கு முன்பாக உள்ள குடும்பஸ்தர் ஒருவரின் வீடே இவ்வாறு தீயில் எரிந்து சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தீ விபத்தானது இன்று(23.07.2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
ஓட்டு வீடாக காணப்படும் குறித்த வீட்டின் கூரைப் பகுதியில் தீ பற்றி பரந்து எரியத் தொடங்கியமையினால் வீட்டின் கூரைப்பகுதி முற்றாக சேதமடைந்துள்ளது.
சம்பவத்தினை அறிந்த கிராம இளைஞர்கள் ஒன்று சேர்ந்து தீயினை கட்டிற்குள் கொண்டு வந்துள்ளதுடன் மின்சார சபையினருக்கு உடனடியாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து விரைந்த மின்சார சபை ஊழியர்கள் வீட்டிற்கான மின் இணைப்பினையும் துண்டித்துள்ளார்கள்.
இந்த தீ பரவலை கட்டுக்குள் கொண்டுவந்த வீட்டு உரிமையாளர்களின் உறவினர் முறையான இளைஞன் ஒருவர் வீட்டின் கூரை ஒடு விழுந்து காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
