“தவறிழைத்தவர்களுக்குத் தண்டனையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும் வழங்குக” சுகாஸ் தெரிவிப்பு

4 months ago



மன்னாரில் உயிரிழந்த தாய், சிசுவின் மரணத்துக்கான            உண்மையான காரணங்கள் கண்டறியப்பட்டு, தவறுகள் நடைபெற்றிருக்குமாயின் தவறிழைத்தவர்களுக்குத் தண்டனையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும் வழங்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரட்ணம் சுகாஸ் தெரிவித்தார்.

மருத்துவத் தவறுகளால் எம்மவர்களின் உயிர்கள் அநியாயமாகக் காவு    கொள்ளப்படுவதை சகித்துக்கொள்ள முடியாது.

எனவே, உரிய தரப்பினர் விரைந்து இதற்கு சரியான ஒரு தீர்வை வழங்க வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.