வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், சர்வதேச நீதி வேண்டி இன்று யாழில் ஆர்ப்பாட்டப் பேரணி
5 months ago







வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், சர்வதேச நீதி வேண்டி இன்று யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டனர்.
வடக்கு மாகாணத்தின் மாவட்டங்கள் தோறும் மாதாந்தம் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில் ஓர் அங்கமாகவே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் முனியப்பர் ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் ஊர்வலமாக யாழ். பிரதான வீதி மற்றும் காங்கேசன்துறை வீதியூடாக சென்று யாழ். மத்திய பஸ் நிலையத்தை அடைந்தது.
இதையடுத்து யாழ். மத்திய பஸ் நிலையத்தில் ஒன்றுகூடிய உறவுகள் தமது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் நிலை குறித்து சர்வதேசமே தீர்வை வழங்க வேண்டும் போன்ற சுலோகங்களை வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்தனர்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
