நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஐஸ் பதனீர் உற்பத்தி உபகரணம் யாழ்.கைதடி பனை ஆராய்ச்சி நிறுவகத்தில் அறிமுகம்

2 months ago



நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஐஸ் பதனீர் உற்பத்தி உபகரணம் நேற்று முன்தினம் திங்கட்கிழமை கைதடியில் அமைந்துள்ள பனை ஆராய்ச்சி நிறுவகத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

பனை அபிவிருத்திச் சபைத் தலைவர் வி. சகாதேவன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பனை ஆராய்ச்சி நிலைய உத்தியோகத்தர்கள் மற்றும் தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்த அன்ரனி ராஜ் மற்றும் பொறியியலாளர் டிரோன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

புலம்பெயர் தமிழர்களின் நிதிப் பங்களிப்பில் இந்த உபகரணம் தயாரிக்கப்பட்டு பனை ஆராய்ச்சி நிறுவகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.