விபத்தில் சிக்கிச் சிகிச்சை பெற்றுவந்த வவுனியாவைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
5 months ago

விபத்தில் சிக்கிச் சிகிச்சை பெற்றுவந்த வவுனியாவைச் சேர்ந்த 23 வயதுடைய, பல்கலைக்கழக மாணவர் ஒருவர் நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளார்.
வவுனியாவைச் சேர்ந்த சந்திரபோஸ் சசிகாந் (வயது -23) என்ற கொழும்பு பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த 25ஆம் திகதி நண்பரின் வீடொன்றுக்கு மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது, நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றுடன் மோதி இவர் விபத்துக்குள்ளாகி இருந்தார்.
இறப்பு விசாரணைகள் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேம்குமாரால் நேற்று முன்னெடுக்கப்பட்டன.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
