
இலங்கையின் 77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வவுனியாவில் வாகனப் பேரணி நடத்த அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வன்னி மக்கள் ஒன்றியத்தின் தலைவர் சிவஞானம் தெரிவித்துள்ளார்.
வவுனியா, கோவில்குளம் பகுதியில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கோரினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
இலங்கையின் 77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வவுனியாவில் வாழ்கின்ற தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக கடந்த ஆண்டைப் போன்று இம்முறையும் வவுனியாவில் ஒரு வாகனப் பேரணி ஒன்றை நடத்தவுள்ளோம்.
இது அரசியல் கலப்படம் இல்லாமல் சமூகமாக இணைந்து இதனை நடத்தி வருகின்றோம்.
இதற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு வாகனங்கள், ஓட்டோக்கள், லொறிகள் என்பன தேவையாகவுள்ளன.
இதனைக் கடந்த காலங்களில் ஓட்டோ சங்கம், பாரவூர்தி சங்கம், பஸ் சங்கம், வர்த்தக சங்கம், சிறு வியாபாரிகள் சங்கம், சர்வமத சங்கம் ஆகியோரின் ஒத்துழைப்புடன் நடத்தி வருகின்றோம்.
இந்த வருடமும் 77 ஆவது சுதந்திர தினத்தை வெற்றிகரமாக நடத்த அனைவரது ஒத்துழைப்பையும் வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றேன். - எனத் தெரிவித்தார்.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
