ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக சபைக்கு மீண்டும் இலங்கை தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை நியூயோர்க்கில் இடம்பெற்ற வாக்கெடுப்பின்போது இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலதிகமாக 07 வாக்குகள் கிடைக்கப் பெற்று இலங்கைக்கு மொத்தமாக 182 வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக சபைக்கு இலங்கை தேர்ந்தெடுக்கப்பட்டது.
சபையின் உறுப்பினராக, வறுமை ஒழிப்பு, உணவுப் பாதுகாப்பு மற்றும் பாலின சமத்துவம் உள்ளிட்ட திட்டங்களுக்கு இலங்கை பங்களிப்பதாக வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
