முல்லைத்தீவில் ஆசிரியர் தங்கியிருந்த வீடு மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன இனம் தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டன.
8 months ago



முல்லைத்தீவு, முள்ளியவளையில் ஆசிரியர் ஒருவர் தங்கியிருந்த வீடு மற்றும் ஆசிரியரின் மோட்டார் சைக்கிள் என்பன இனம் தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டன.
சக ஆசிரியர்களின் உதவியுடன் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட போதும், ஆசிரியர் தங்கியிருந்த வீடு பகுதியளவில் எரிந்துள்ளது.
இதேவேளை, மோட்டார் சைக்கிள் பாவிக்க முடியாத வகையில் முழுமையாக எரிந்து நாசமாகியது.
முள்ளியவளையில் பிரபல பாடசாலையில் கற்பிக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆசிரியரின் வீட்டிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
குறித்த ஆசிரியருக்கும், உயர்தர மாணவன் ஒருவருக்கும் இடையில் முரண்பாடு இருந்து வந்த நிலையில் குறித்த மாணவன் பாடசாலையிலிருந்து இடைநிறுத்தப்பட்டார்.
பின்னர் மீண்டும் அந்த மாணவனை பாடசாலையில் சேர்த்த நிலையில் நேற்று முன்தினம் இரவு குறித்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் கூறினர்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
