முல்லைத்தீவில் தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டிய குடும்பஸ்தர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
7 months ago

முல்லைத்தீவில் தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டிய குடும்பஸ்தர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் - முத்துவிநாயகபுரம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில், அதே இடத்தைச் சேர்ந்த காசிலிங்கம் தங்கதீபன் (வயது 45) என்பவரே உயிரிழந்தார்.
யானைகள் நுழையாமல் தடுப்பதற்காக அமைக்கப்பட்ட மின்சார வேலியில் சிக்கியே குறித்த நபர் உயிரிழந்தார்.
இந்த மின்வேலி சட்டரீதியாக அமைக்கப்பட்டதா என்பது தெரிய வரவில்லை.
உயிரிழந்தவர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சுவரொட்டிகளை ஒட் டிய போதே இந்த அனர்த்தம் நிகழ்ந்தது.
சம்பவம் தொடர்பில் ஒட்டுசுட்டான் பொலிஸார் விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
