பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்ஷ மீண்டும் அரசியல் செயல்பாடுகளை ஆரம்பித்துள்ளதாக தகவல்
2 months ago

பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகரும், முன்னாள் அமைச்சருமான பஸில் ராஜபக்ஷ மீண்டும் தனது அரசியல் செயல்பாடுகளை ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையில் பரந்துபட்ட எதிர்க்கட்சிக் கூட்டணி ஒன்றை உருவாக்கும் முயற்சியொன்றை அவர் முன்னெடுத்துள்ளதாகத் தெரியவருகின்றது.
அதற்காக அமெரிக்காவில் இருந்தவாறே இலங்கையில் உள்ள பல்வேறு கட்சிகளின் தலைவர்களுடன் அவர் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான அரசாங்கத்தின் நடவடிக்கைகளை மக்கள் மயப்படுத்தி, அதன் ஊடாக தங்கள் கட்சி இழந்துள்ள செல்வாக்கைத் தூக்கி நிமிர்த்துவதற்கான செயற்பாடுகளையும் அவர் முன்னெடுத்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
