
முல்லைத்தீவு, முள்ளிவாய்க்காலில் கிணற்றில் தவறி வீழ்ந்து இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை (02) காலை இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய இளைஞன் ஆவார்.
உயிரிழந்த இளைஞன் தனது தாயுடன் வசித்து வந்துள்ள நிலையில் உயிரிழந்துள்ளார்.
சம்பவ தினத்தன்று தாய் வீட்டில் இருந்து வெளியே சென்று மீண்டும் வீடு திரும்பிய போது இளைஞன் வீட்டுக்கு அருகில் உள்ள 15 அடி ஆழமுடைய கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்திருப்பதை கண்டுள்ளார்.
இதனையடுத்துப் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
