இலங்கை பாராளுமன்றில் முதன்முறையாக தைப்பொங்கல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

2 months ago



இலங்கை பாராளுமன்றில் முதன்முறையாக தைப்பொங்கல் நிகழ்வு நேற்று(24) இடம்பெற்றுள்ளது.

புத்த சாசன மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் வழிகாட்டலில், சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் தைப்பொங்கல் நிகழ்வு நேற்று(24) காலை பாராளுமன்ற வளாகத்தின் முன்பாக இடம்பெற்றது.

விசேட பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து பொங்கல் நிகழ்வு இடம்பெற்று கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்றப் பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.