

மன்னார் மாவட்ட பொது வைத்திய சாலையில் குழப்பம் ஏற்படுத்தியதான வழக்கில் விளக்கமறியலில் வைக்கப் பட்டுள்ள வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவின் பிணை மனு மன்னார் நீதிவான் நீதிமன்றத்தால் இன்று நிராகரிக்கப்பட்டது.
மன்னார் மாவட்ட பொது வைத்திய சாலைக்குள் அத்துமீறி உள்நுழைந்து குழப்பம் ஏற்படுத்தியதான குற்றச்சாட்டில் எதிர்வரும் 7ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வைத்தியர் அர்ச்சுனாவுக்குப் பிணை வழங்க வேண்டும் எனக் கோரி இன்று சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் ஒரு நகர்த்தல் பத்திரத்தைத் தாக்கல் செய்தார்.
இதன்போது சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் தனது சமர்ப்பணத்தில் வைத்தியர் அர்ச்சுனா ஒரு சிறுநீரக நோயாளி என்ற அடிப்படையில் பிணை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.
இதன்போது வைத்தியசாலை சார்பில் 22 சட்டத்தரணிகள் சட்டத்தரணி டெனீஸ்வரன் தலைமையில் ஆஜராகி வைத்தியர் அர்ச்சுனாவுக்குப் பிணை வழங்குவதைக் கடுமையாக ஆட்சே பித்தனர். இதனையடுத்துப் பிணை மனு நிராகரிக்கப்பட்டது.
மருத்துவ தவறால் பெண் ஒருவர் உயிரிழந்ததாக கூறுவதும் இதே வைத்தியசாலையில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
