யாழ்.சங்கானை அலைமகள் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தினரை யாழ். இந்திய துணை தூதுவர் இன்று சந்தித்தார்
3 months ago



யாழ்ப்பாணம், சங்கானை பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட அலைமகள் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தினரை யாழ். இந்திய துணை தூதுவர் சாய் முரளி இன்று (12) சந்தித்துக் கலந்துரையாடினார்.
இதன்போது கடற்றொழிலாளர்கள் மீன் பிடியில் ஈடுபடும் கடற்கரைக்கு தூதுவர் சென்றார்.
தொடர்ந்து மீனவர்கள் தமது வாழ்வாதாரப் பிரச்சினை குறித்து கலந்துரையாடினார்.
அங்கு இழுவை மடிகளால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் நிலை குறித்தும் மீனவர்களின் தேவைகள் குறித்தும் கலந்துரையாடினார்.
இதேவேளை கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகளால் துணைதூதுவருக்கு மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
யாழ். இந்திய துணைதூதரக அதிகாரிகளான செல்வி ரம்யா மற்றும் நாகராஜன், அலைமகள் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
