
இலங்கை நாணயத்தாள்களைக் காலால் மிதித்து அவமானப்படுத்திய குற்றச்சாட்டில் தியாகி அறக்கொடை நிறுவுநர் நேற்று யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் முன்னிலையாகிய பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
அவரது உடல் சோர்வே நாணயத்தாள்களை மிதித்தமைக்குக் காரணம் என்று அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி வி.திருக்குமரன் முன்வைத்த காரணத்தை ஏற்க நீதிவான் மறுத்தார்.
மனநிலையை வைத்து அவர் நீதிமன்றத்துக்குக் கல் எறிந்தால் ஏற்றுக்கொள்வீர்களா என்றும், அவரது செயற்பாடு பற்றிய காணொலியை வெளியிட்டால் ஏற்றுக்கொள்வீர்களா? என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
