வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருகோணமலையில் கமநல காப்புறுதிச் சபையின் விசேட அதிகாரிகள் குழு பார்வையிட்டனர்
5 months ago

அண்மையில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தால் அதிகளவு பாதிக்கப்பட்ட திருகோணமலை - சேருநுவர கமநல சேவைப் பிரிவுக்குட்பட்ட வயல் பகுதிகளுக்கு கமநல காப்புறுதிச் சபையின் விசேட அதிகாரிகள் குழு வருகை தந்து பார்வையிட்டு சேத விவரங்களை அறிக்கையிட்டனர்.
கமநல சேவை காப்புறுதிக் குழுவின் உத்தியோகத்தர்கள், சேருநுவர கமநலசேவைத் திணைக்கள உத்தியோகத்தர்கள் பாதிக்கப்பட்ட வயல் நிலங்களுக்கு சென்று சேத நிலைமைகளை பார்வையிட்டு விவசாயிகளிடமிருந்து தகவல்களை பெற்றுக்கொண்டனர்.
தமது வேளாண்மைச் செய்கை பாதிக்கப்பட்ட நிலையில் யாரும் வந்து பார்வையிடவில்லை. இப்போதுதான் வந்து பார்க்கின்றனர்.
தாம் இரண்டாவது தடவையாக விதைப்புச் செய்துள்ளதாகவும் அதிகளவு செலவு ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி விவசாயிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
