வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருகோணமலையில் கமநல காப்புறுதிச் சபையின் விசேட அதிகாரிகள் குழு பார்வையிட்டனர்
3 months ago

அண்மையில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தால் அதிகளவு பாதிக்கப்பட்ட திருகோணமலை - சேருநுவர கமநல சேவைப் பிரிவுக்குட்பட்ட வயல் பகுதிகளுக்கு கமநல காப்புறுதிச் சபையின் விசேட அதிகாரிகள் குழு வருகை தந்து பார்வையிட்டு சேத விவரங்களை அறிக்கையிட்டனர்.
கமநல சேவை காப்புறுதிக் குழுவின் உத்தியோகத்தர்கள், சேருநுவர கமநலசேவைத் திணைக்கள உத்தியோகத்தர்கள் பாதிக்கப்பட்ட வயல் நிலங்களுக்கு சென்று சேத நிலைமைகளை பார்வையிட்டு விவசாயிகளிடமிருந்து தகவல்களை பெற்றுக்கொண்டனர்.
தமது வேளாண்மைச் செய்கை பாதிக்கப்பட்ட நிலையில் யாரும் வந்து பார்வையிடவில்லை. இப்போதுதான் வந்து பார்க்கின்றனர்.
தாம் இரண்டாவது தடவையாக விதைப்புச் செய்துள்ளதாகவும் அதிகளவு செலவு ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி விவசாயிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
